கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக வடமாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் வகையில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுகிறது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது. இதில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் மற்றும் யாழ்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட செலாளர்களின் பிரதிநிதிகள், குறித்த மாவட்டங்களில் கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர்கள் மற்றும் கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வட மாகாண கடற்றொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். கடல் உணவுகளை வட மாகாணத்திற்கு வெளியே எடுத்துச்செல்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளமையினால் வர்த்தக செயற்பாடுகள் வீழ்ச்சியடைந்துள்ளன. இவ்வாரான பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.