முழுமையாக தொற்று நீக்கத்திற்கு உட்படுத்தப்பட்தன் பின்னர் பாராளுமன்ற கட்டிடத்தொகுதி இன்று மீண்டும் திறக்கப்பட்டள்ளது. இன்று முதல் வழமைப்போன்று பணிகள் இடம்பெறுமென பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார வழிகாட்டல்களுக்கமைய ஊழியர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்ற புலனாய்வு பிரிவில் இனைந்து பணியாற்றிய பொலிஸ் அதிகாரி ஒருவர் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டார். அவர் பேலியகொடை மீன் சந்தை கட்டிடத்தில் மீன் கொள்வனவு செய்தவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவருடன் மேலும் இருவர் பீ.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில், ஏனைய இருவருக்கும்; தொற்று ஏற்படவில்லையென உறுதிப்படுத்தப்பட்டது. எனினும் தொற்றுக்குள்ளான பொலிஸ் அதிகாரியுடன் நெருங்கி பழகிய மேலும் 25 பேர் பாராளுமன்ற விடுதி அரைகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.