நாட்டில் அதிகூடிய நாளாந்த கொரோனா தொற்றாளர்கள் நேற்று பதிவாகினர். 309 பேர் நேற்றைய தினத்தில் தொற்றாளர்களாக பதிவாகினர். நேற்று பதிவாகிய 309 பேரில் 188 பேர் பேலியகொட மீன் வர்த்தக சந்தையுடனும் ஏனைய 121 தொற்றாளர்களும் மினுவன்கொட ஆடை கைத்தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புப்பட்டவர்கள் என கொவிட் 19 பரவலை தடுக்கும் செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
இதற்கு அமைய மினுவங்கொட ஆடை கைத்தொழிற்சாலை கொத்தணியின் பதிவாகியுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,631 ஆகும். இவர்களில் 1328 பேர் அவ்வாடை கைத்தொழிற்சாலையின் ஊழியர்கள் ஆவர். ஏனைய 1303 பேர் அவர்களுடன் தொடர்புப்பட்டவர்கள். பேலியகொட மீன் வர்த்தக சந்தையில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட 1178 பி.சி.ஆர் பரிசோதனைகளில் 350 பரிசோதனைகளின் பெறுபேறுகள் கிடைத்துள்ளன. இதில் 250 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.