கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட 83 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைய இதுவரை ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 596 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட சம்பவம் தொடர்பில் 76 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.