முகக்கவசத்தை கட்டாயமாக்க சுவிட்சர்லாந்து தீர்மானித்துள்ளது. கொவிட் – 19 தொற்று பரவலை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். உள்ளக செயற்பாடுகள் மக்கள் ஒன்றுகூடுவதை மட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. சுகாதார ஆலோசனைகளுக்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை உணவகங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களை மூட பெல்ஜியம் தீர்மானித்துள்ளது. தெரிவுசெய்யப்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பொலிஸ் ஊரடங்கும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே போலந்தில் நோய்த்தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் ஒருசில விளையாட்டு மைதானங்களில் தற்காலிக வைத்தியசாலைகளை நிர்மாணிக்க அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.