அமெரிக்காவின் எலஸ்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.5 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எலஸ்கா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு பொது மக்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளியிலிருந்து 100 கிலோ மீற்றர் தூரத்தில் இரு சுனாமி அலைகள் உருவாகியுள்ளன. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.