இத்தாலியில் மீண்டும் கொவிட் 19 தொற்று பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளன. பொது இடங்களுக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமென இத்தாலி அரசாங்கம் அறிவித்துள்ளது. மீண்டும் நாடு முழுமையாக முடக்கப்படுவதை தவிர்ப்பதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் சுகாதார பிரிவு மற்றும் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டுமென இத்தாலி அறிவுறுத்தியுள்ளது. அந்நாட்டில் கொரோனா தொற்றினால் நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 11 ஆயிரத்து 705 பேர் கொரோனா வைரஸினால் இத்தாலியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.