மக்கள், தபால் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் ஊடாக ஜனாதிபதி காரியாலயத்தை தொடர்பு கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 ஒழிப்பிற்காக சுகாதார பிரிவு வழங்கியுள்ள ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமைய பொதுமக்கள் ஜனாதிபதி காரியாலயத்திற்கு வருகை தரும் போது காரியாலயத்திற்குள் குறைந்தளவான ஊழியர்கள் இருப்பதால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய தபால் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் ஊடாக மக்களின் கோரிக்கைகளுக்கு பதில் வழங்க ஜனாதிபதி செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதி காரியாலயத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவு ஒம்புட்ஸ்மன் காரியாலயம் மற்றும் ஜனாதிபதி நிதியம் ஆகியவற்றுக்கு கீழ் காணும் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஊடாக தொடர்புகளை ஏற்படுத்த முடியும்.