முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதுர்தீனுடன் தொலைப்பேசியில் கலந்துரையாடியமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தன்னிடம் வாக்குமூலம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ரிஷார்ட் பதுர்தீனை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை வழங்குவதற்கு முன்னரே அவருடன் தொலைபேசியில் உரையாடியதாக ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
20வது அரசியல் திருத்தத்திற்கு எவ்வாறு வாக்களிப்பது என்பது தொடர்பில் ரிஷாட் பதுர்தீன் தன்னுடன் கலந்துரையாடினார் வேறு எந்த விடயங்களும் கலந்துரையாடப்படவில்லை. இதேவேளை ரிஷாட் பதுர்தீன் சரணடைவதே சிறந்தது. பின்னர் பிணைக்கோர முடியுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.