மொரட்டுவை மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நாளை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அவசர திருத்தப்பணிகள் காரணமாக நாளை இரவு 8 மணிமுதல், நாளை மறுதினம் காலை 8 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.
எனினும் மொரட்டுவை மாநகரசபைக்குட்பட்ட சொய்சாபுர குடியிருப்பு தொகுதிக்கு தொடர்ந்தும் நீர் விநியோகிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. எகொட உயன மற்றும் மோதர பிரதேசங்களுக்கும் குறைந்த அழுத்தத்துடனான நீர்விநியோகம் இடம்பெறுமமென நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.