தாய்லாந்து அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. அரச சட்டங்களை உடன் மீள் சீர்திருத்த வேண்டுமெனவும் பிரதமர் ரியுத் வான் ஓவா உடன் ராஜானாமா செய்ய வேண்டுமென்றும் தாய்லாந்தின் பெங்கோக் நகரை ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
2014 ம் ஆண்டு இராணுவ புரட்சியினால் அதிகாரத்திற்கு வந்த தற்போதய பிரதமர் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியதனால் ஜனநாயகம் கடும் நெருக்கடிக்கு உட்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசை விமர்சிப்பது பாரிய தண்டைக்குரிய குற்றமாக இருந்த போதிPலும் பல வாரங்களாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.