முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கைதுசெய்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 6 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
2019 ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்ந்த வாக்காளர்களை புத்தளத்திலிருந்து சிலாபத்துறை வரை இலங்கை போக்குவரத்து சபைக்குரிய 222 பஸ் வண்டிகள் மூலம் அழைத்துச் சென்றதன் மூலம் ஒன்பதரை மில்லியன் ரூபா பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக பதியுதீன் உள்ளிட்ட மேலும் இருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக ரிஷாட் பதியுதீன் இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியேற்றும் திட்டத்தின் பணிப்பாளர் சம்சுதீன் மொஹமட் பாசில் மற்றும் அத்திட்டத்தின் கணக்காளர் அழகரத்னம் மனோ ரஞ்சன் ஆகியோரை கைது செய்வதற்கு பிடியாணை பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.