அரச வைத்தியசாலைகளில் கிளினிக் சிகிச்சைப்பெறும் நோயாளர்களின் மருந்துகளை வீடுகளுக்கு பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை முன்னெடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டின் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பதில் சுகாதார பணிப்பாளர் நாயகம், வைத்தியர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். நாற்பட்ட நோய்களுடன் கூடிய முதியவர்கள் வைத்தியசாலைக்கு வருகைத்தருவதை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
கிளினிக் சிகிச்சையின்போது வைத்தியசலைகளில் அதிக சனநெரிசல் ஏற்படுகிறது. இதனால் கொரோனா வைரஸ் பரவும் அபாயமும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கமைய நாளை முதல் மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் திட்டத்தை முதற்கட்டமாக ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக பதில் சுகாதார பணிப்பாளர் நாயகம், வைத்தியர் எஸ்.ஸ்ரீதரன் மேலும் தெரிவித்துள்ளார்.