கடந்த 5 நாட்களில் 26 ஆயிரத்துக்கும் அதிகமான பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். மினுவங்கொடை கொரோனா கொத்தணியை அடுத்து பீசீஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. நோயாளிகளிடம் தகவல்களை பெற்றுக்கொண்டு அதற்கமைய உரிய தினத்தில் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
சரியான நேரத்தில் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படாத பட்சத்தில் அவற்றின் முடிவுகள் துல்லியமாக அமையாதெனவும் தொற்று நோய் ஆய்வு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.