நாட்டில் நிலவும் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காரணமாக மழைகொண்ட வானிலை அடுத்த சில தினங்களுக்கு நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பல பிரதேசங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாமென கடமையிலிருந்த வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.