கம்பஹா மாவட்டத்திலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும், ஞாயிறு ஆராதனைகளை இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை கலாநிதி கெமிலஸ் பெர்னாண்டோ குறித்த அறிவித்தலை விடுத்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் இரு வாரங்களுக்கு ஞாயிறு ஆராதனைகளை இடைநிறுத்தப்படவுள்ளன. நாளாந்தப் பூஜைகள், திருமண நிகழ்வுகள், மற்றும் இறுதி சடங்கு நடவடிக்கைகளுக்கு, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கிணங்க, 50 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.