2020 ம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு ஐக்கிய நாடுகளின் உலக உணவு வேலைத்திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இம்முறை சமாதானத்திற்கான நோபல் பரிசு ஐக்கிய நாடுகளின் உலக உணவு வேலைத்திட்டத்திற்கு வழங்கப்படுவதாக நொவீஜியாவின் நோபல் குழு இன்றைய தினம் அறிவித்துள்ளது. யுத்தம் மற்றம் சிவில் பிரச்சினைகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மில்லியன் கணக்கான மக்களின் பட்டினியை போக்குதற்காக உலக உணவு வேலைத்திட்டம் முன்னெடுத்த பாரிய அர்ப்பணிப்புக்காக சமாதானத்திற்கான நோபல் பரிசு உலக உணவு வேலைத்திட்டத்திற்கு வழங்கப்படுவதாக நோபல் குழு அறிவித்துள்ளது.
அத்தோடு 1.1 மில்லியன் டொலர் பணப் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. 101 வது சமாதானத்திற்கான நோபல் பரிசை உலக உணவுத்திட்டம் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.