கொவிட் -19 எனும் பெயரில் நான்கு முத்திரைகள் வெளியிடப்பட உள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. சர்வதேச தபால் தினத்தை முன்னிட்டு முத்திரைகள் வெளியிடப்பட உள்ளன. கொவிட்-19 இனை கட்டுப்படுத்துவதில் மக்களை மேலும் விழிப்புணர்வூட்டும் வகையில் புதிய முத்திரை வெளியிடப்பட உள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.