பொது மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்த்து, கொவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்கும் முகமாக 2020 அக்டோபர் 08 மற்றும் 09 ஆகிய திகதிகளில் அமைச்சின் கொன்சுலர் விவகாரங்கள் பிரிவினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் இடைநிறுத்துவதற்கு வெளிநாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டு அமைச்சு நேற்று (07) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.