நியூஸிலாந்தில் ஏற்பட்ட காட்டுத் தீ அனர்த்தம் காரணமாக நூற்றுக்கும் அதிமான குடியிருப்புக்கள் அழிவடைந்துள்ளன. எனினும், அனர்த்தத்தால் எந்தவொரு உயிரிழப்புக்களும் பதிவாகவில்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்று காலை முதல் நியூஸிலாந்தில் தெற்கு பகுதியில் உள்ள தீவில் காட்டுத் தீ பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பு அழிவடைந்துள்ளதாக நியூஸிலாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. அனர்த்தங்களில் இருந்து பாதுகாப்பு பெறும் வகையில் நியூஸிலாந்து மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.