இலங்கையில் புதிய பரிமாற்றங்களுடனான தபால் சேவைகளை எதிர்காலத்தில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தபால் சேவைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை ராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண தபால் சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தபால் சேவை அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கண்டறியும் நோக்கிலான சந்திப்பு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே ராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார். தபால் சேவைகளில் நிலவும் ஆளனி வெற்றிடங்கள் இதுவரை நிரப்பப்படாமை தபால் நிலைய கட்டடங்கள் இல்லாமை, வெளி மாவட்டங்களிலிருந்து வந்து பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கான விடுதிகள் இன்மை போன்ற விடயங்கள் குறித்து துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டன. ராஜாங்க அமைச்சின் செயலாளர் ஏ.சேனாநாயக்க, வடமாகாண பிரதி தபால் மா அதிபர் திருமதி மதுமதி வசந்த குமார், பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலவருமான அங்கஞன் ராமநாதன் உள்ளிட்ட பலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.