அரச ஊழியர்களுக்கென கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத்தொகுதி திட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்துவைக்கவுள்ளார். 5 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா செலவில் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொரள்ளை, வனாத்தமுல்ல பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஓவல் வியு ரெசிடென்சி வீட்டுத்தொகுதி நாளை மறுதினம் திறந்து வைக்கப்படவுள்ளதாக பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.
முன் விற்பனை அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த வீட்டுத்தொகுதியில் 608 வீடுகள் உள்ளன. மூன்று படுக்கையறைகள் மற்றும் 2 படுக்கையறைகளைக் கொண்ட தலா 304 வீட்டுத்தொகுதியில்; உள்ளடங்குகின்றன. வாகன தரிப்பிடம், சிறுவர் பூங்கா, இரண்டு உடற்பயிற்சி நிலையங்கள், வர்த்தக தொகுதி, நீச்சல் தடாகம் உட்பட பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.