தங்கொட்டுவ, கொஸ்வத்த பகுதியில் 15 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அவற்றின் பெறுமதி 15 கோடி ரூபாவிக்கும் அதிகமென போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.