களனிவெளி புகையிரத வீதியில் சட்டவிரோத குடியேற்றக் காரர்களுக்கு புதிய வீடுகளை வழங்கும் நிகழ்வு அமைச்சர் காமினி லொக்குகே தலைமையில் இடம்பெற்றது.
கொழும்பு நகரை அண்டிய பகுதிகளிலுள்ள புகையிரத வீதிகளை விஸ்த்தரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ள திட்டத்திற்கு அமைய இச்சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் நீக்கப்பட்டனர். களனிவெளி புகையிரத வீதியின் இருமருங்கிலும் வசித்து வந்தவர்களுக்காக ஆயிரத்து 244 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டது. முதல் கட்டத்தின் கீழ் 384 வீடுகள் , மாளிக்கவத்த, லக்கிரு செவன வீடமைப்பு கட்;டத்தொகுதி வழங்கப்பட்டது.
நாட்டின் அபிவிருத்திக்காக சகலரும் பங்களிப்பு செய்ய வேண்டுமென அமைச்சர் காமினி லொக்குகே இதன்போது தெரிவித்தார். ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவும் இங்கு கருத்து தெரிவித்தார்.