இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் தீ விபத்து ஏற்பட்ட எம்.ரி.நியு டயமண்ட் கப்பலின் பிரதான மாலுமி கொழும்பு பிரதான நீதவான நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கிரேக்க பிரஜையான திரோஸ் ஹில்லியாஸ் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். கடந்த 17 ம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் ப்ரியந்த லியனகே பிறப்பித்த அழைப்பாணைக்கு அமையவே அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
விசாரணைகளை முன்னெடுத்துள்ள குற்றப்புலனாய்வு திணைக்களம் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப்ப பீரிஸ் முன்வைத்த கோரிக்கைக்கு அமையவே நீதவான் அதுதொடர்பான உத்தரவை பிறப்பித்தார். தீ விபத்து ஏற்பட்ட போது அதனை கட்டுப்படுத்துவதற்கு தன்னியக்க பாதுகாப்பு முறைகளை பின்பற்றாமை மற்றும் தீ பரவல் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய நிறுவனங்களை அறிவுறுத்தாமை தொடர்பில் கப்பலின் பிரதான மாலுமிக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.