நோபல் பரிசுத்தொகை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 1.1 மில்லியன் அமெரிக்க டொலராக பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதென நோபல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. நிதிநிலைமையை மேம்படுத்துவதற்கென கடந்த 2011ம் ஆண்டு பரிசுத்தொகை குறைக்கப்பட்டது. எனினும் தற்போது நிதிநிலைமை மேம்படுத்தப்பட்டதையடுத்து பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மருத்துவம், வேதியியல், கலாசாரம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய பிரிவுகளுக்கான பரிசுத்தொகை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ம் திகதியின் பின்னர் அறிவிக்கப்படுமென நோபல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.