கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை திடீர் சோதனைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. அரிசி விலை தொடர்பில் அரசாங்கம் வர்த்தமானி வெளியிட்டுள்ளது. எனினும் சில வர்த்தகர்கள் உத்தரவாத விலையை விட, கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
ஒரு கிலோ நாட்டரிசியின் அதிகூடிய சில்லரை விலை 96 ரூபாவாகும். சம்பா அரிசியின் அதிகூடிய சில்லரை விலையும் 96 ரூபாவாகும். கீரி சம்பா வகை அரிசியின் அதிகூடிய சில்லரை விலை 120 ரூபா என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விலைகளை விட, கூடுதல் விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்தள்ளது.