பண்டாரவளை பதுளை வீதியில் பண்டாரவளை நகர் மத்தியில் இருந்த 3 மாடி கட்டடம் தீப்பற்றிக்கொண்டது.
சென் ஜோசப் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள வர்த்தக நிலையத்தின் 3வது மாடியில் இந்த தீச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. பண்டாரவளை மாநகர சபை தீயணைப்பு பிரிவினரும் தியத்தலாவ இராணுவ முகாம் அதிகாரிகளும் இணைந்து தீயை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.
தீ ஏற்பட்டதற்கான காரணம் என்னவென இதுவரை அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக பண்டாரவளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சேத விபரங்கள் குறித்தும் அறிவிக்கப்படவில்லை.