நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அணுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இதற்கென 3 திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக நாசா தெரிவித்துள்ளது. கடந்த 1969ம் ஆண்டு நிலவில் முதன் முதலில் நீல் ஆம்ஸ்டாங் காலடி எடுத்துவைத்தார். இந்நிலையில் எதிர்வரும் 2024ம் ஆண்டில் இருவரை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த இருவரில் ஒருவர் பெண் விண்வெளி வீராங்கனையென நாசா தெரிவித்துள்ளது. திட்டத்திற்கு என 28 பில்லியன் டொலர் செலவாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.