விளையாட்டு சட்ட மூலங்கள் தற்போதைய யுகத்திற்கு பொருந்தாமையினால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தொழில்சார் ரீதியிலான விளையாட்டு கலாச்சாரம் ஒன்றின் ஊடாக விளையாட்டு துறையின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவது குறித்து கொழும்பில் இடம்பெற்ற சொற்பொழிவின் போது அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்தார். விளையாட்டுத்துறையின் அபிவிருத்திக்காக குறுகிய மற்றும் நீண்ட காலதிட்டங்கள் அமுல்படுத்த வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கிராமிய மட்டத்தில் விளையாட்டை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனர் தயாரத்நாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.