கண்டி பூவெலிகட பிரதேசத்தில் 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த கட்டிடம் இடிந்து வீழ்ந்தமையினால் அதனை அண்மித்த பகுதியில் காணப்பட்ட ஹோட்டலுடன் கூடிய வீட்டிலிருந்த இளம் தம்பதியினரும் அவர்களின் கைக்குழந்தையும் பலியாகினர். குறித்த 5 மாடி கட்டிடத்திற்கு இணைவாக காணப்பட்ட மற்றுமொரு கட்த்தில் இடிந்து வீழ்ந்தமையே அதற்கு காரணம். கட்டிட இடுபாடுகளுக்குள் இருந்து இருவர் மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த தம்பதியினரும் குழந்தையும் உயிரிழந்தனர். கட்டிட இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கைகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்நிலையில் கட்டிடம் இடிந்து வீழ்ந்தமைக்கான காரணம் குறித்த ஆய்வுகளை புவிசர்தவியல் நிபுணர்கள் முன்னெடுத்துள்ளனர். கட்டிடம் உரிய தரத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்ததா இல்லையா என்பது குறித்தும் கட்டிடம் அமையப்பெற்றுள்ள காணி, உயர்ந்த கட்டிடம் ஒன்றை நிர்மாணிக்க ஏற்புடையதா என்பது குறித்தும் அவர்கள் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் கட்டிட நிர்மாணத்திற்கான அனுமதியை வழங்கிய அதிகாரிகளிடம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் . கட்டிடத்தின் உரிமையாளர் சம்பவம் இடம’பெற்ற இடத்திற்கு இன்றைய தினம் வருகை தந்தார். கட்டிடம் உரிய தரத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.