பிரித்தானியா தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை எதிர்கொண்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். எனினும் அன்றாட வாழ்வியலை கருத்திற் கொண்டு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக இடைவெளியை முறையாக பின்பற்றினாலே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியுதென பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் குறிப்பிட்டுள்ளார். அங்கு கடந்த 24 மணித்தியாலங்களில் 4 ஆயிரத்து 322 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 85 ஆயிரத்து 936 ஆக உயர்வடைந்துள்ளது. பிரித்தானியாவில் வைரஸ் தொற்றினால் 41 ஆயிரத்து 732 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.