20 வது அரசியல் அமைப்பு திருத்தம் முதலாம் வாசிப்புக்காக எதிர்வரும் 20 ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.
அதன்போது 20 வது சீர்திருத்த வரைபு பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல் புத்தகத்தில் இணைக்கப்படவுள்ளது. 20 வது சீர்திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதற்கு 7 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் ஒரு நபர் அல்லது ஒரு தரப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தால் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக 3 வார காலம் வழங்கப்படும் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் 20 வது அரசியல் திருத்தம் தொடர்பான வரைபின் 2 ம் வாசிப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். குறித்த காலப்பகுதியில் சட்ட மூலத்திற்கு எதிராக எவரும் நீதிமன்றத்தை அணுகவில்லையென்றால், 2 ம் வாசிப்பிற்காக சட்ட வரைபை சமர்ப்பிக்க முடியும்.
அதன் பின்னர் செயற்குழு கூட்ட விவாதங்களின் பின்னர் பாராளுமன்றத்தில் 3 ம் வாசிப்பிற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது. 20 வது அரசியல் அமைப்பு திருத்த வரைபு வருத்தமானியில் வெளியிடப்பட்டு 15 நாட்கள் பூர்த்தியடைந்துள்ளன. வரைபின் குறைநிறைகளை ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.