கொரோனா அச்சம் காரணமாக வெளிநாடுகளில் நிர்கத்தியாகியிருந்த மேலும் 111 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். துபாயில் இருந்து 22 பேரும், கட்டாரில் இருந்து 52 பேரும், ஜப்பானில் இருந்து 30 பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 7 பேரும் இன்று காலை நாட்டுக்கு வருகை தந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். குறித்த அனவைரும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கென அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.