போதைப் பொருள் சுற்றிவளைப்பு காரணமாக போதைப் பொருள் தட்டுப்பாடு காரணமாக அதற்கு அடிமைப்பட்டவர்களுக்கு வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த இருவர் தம்புளை பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். பெண் ஒருவரும் இளைஞர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். ஆறு வகையான 823 மாத்திரைகள் இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகாமையில் அதிஷ்ட சீட்டிழுப்புக்களை விற்பனை செய்யும் கூடங்கள் ஊடாக இவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.