பொகவந்தலாவ பின்சின் தோட்டத்தில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 8 பெண்கள் குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். மரத்திலிருந்த குளவிக் கூட்டை கழுகு கொட்டியதில் குளவிகள் கலைந்து தொழிலாளர்களை தாக்கியுள்ளன.