2020 கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி நாளை ஆரம்பமாகின்றது. இலங்கை நூல் வெளியீட்டாளர்களின் சங்கம் 22 ஆவது முறையாகவும் ஏற்பாடு செய்துள்ள கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி, கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக இம்முறை சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளுக்கு அமைவாக நடைபெறவுள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டப வளவில் நடைபெறவுள்ளது.