உத்தேச 20வது அரசியல் யாப்பு சீர்த்திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பாக ஆணையாளர் வெளியிட்ட கருத்தானது தன்னிச்சையாகவும் அனுமான ரீதியாகவும் தெரிவிக்கப்பட்டது என இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஜெனீவாவுக்கான பதில் இலங்கை வதிவிட பிரதிநிதி தயானி மென்டிஸ், ஐக்கிய நாடுகள் ஸ்தாபன மனித உரிமை ஆணையகத்தின் 45வது அமர்வில் உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமைகள் தொடர்பான ஆணையாளர் மிஷேல் பெச்சலே தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையிலயே அவர் இதனை தெரிவித்தார். ஜனநாயக செயற்பாடுகளை பின்பற்றுகின்ற இலங்கை பாராளுமன்றம் ஊடாக முன்வைக்கப்படுகின்ற அரசியல் யாப்பின் 20வது சீர்த்திருத்த சட்ட வரைவு குறித்து கலந்துரையாடி, விவாதித்துள்ளதாகவும் இதன்போது சகல தரப்பினர்களுக்கும் தமது கருத்துக்களையும் தமது நிலைப்பாடுகளையும் முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.