கொழும்பு ஒன்றுக்கு இன்றைய தினம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இரவு 8 மணி முதல் நாளை காலை 8.00 மணி வரையான 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது. அவசர திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில் கொழும்பு 2, 3, 7, 8, 9, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு குறித்த நேரத்தில் குறைந்த அழுத்தத்துடனான நீர் விநியோகம் இடம்பெறுமென தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.