உத்தேச 20வது திருத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில்
கண்டறிவதற்கென நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதி மற்றும்
பிரதமரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இன்று பிற்பகல் அறிக்கை ஒப்படைக்கப்படுமென
பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேற்கொள்ளவேண்டிய திருத்தங்கள் தொடர்பில் ஆராயா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷரூபவ் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவொன்றை அமைத்தார்.
இதேவேளை 20வது திருத்தித்திற்கு அமைய நாட்டின் அபிவிருத்திக்கான முழுமையான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டுமென அமைச்சர் ஜி.எல் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். ஆழமாக ஆராய்ந்து புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே 20வது திருத்தம் தொடர்பில் ஆராய்ந்த குழுவின் அறிக்கை நாளை
அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளது.