அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய 70க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டின் விக்டோரியா மற்றும் மெல்பேர்ன் ஆகிய நகரங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள. எனினும் அவற்றை மீறும் வகையில் பொது இடங்களில் செயற்பட்ட சிலர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 200க்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
அரசாங்கம் விதித்துள்ள புதிய விதிமுறைகள் காரணமாக தாம் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காகவும், அவுஸ்திரேலிய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் கொவிட் – 19 தொற்றினால் இதுவரை 26 ஆயிரத்து 651 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 810 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.