வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
நொச்சிக்குளம் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த சிறுவன் மீது பூம்புகார் பகுதியிலிருந்து ஈச்சங்குளம் நோக்க்p பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதன்போது பலத்த காயமடைந்த சிறுவன் ராணுவத்தினரின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 14 வயதுடைய புவிதன் எனும் புதுக்குளம் மகாவித்தியாலய மாணவன் என எமது செய்தியாளர் தெரிவித்தார். மோட்டார் சைக்கிள் செலுத்துனர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு மற்றுமொருவர் தப்பியோடியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.