இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஜெரூசலேமில் வலுவடைந்துள்ளன. ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய பிரதமர் தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் கொவிட் – 19 தொற்று பரவலை தடுக்கும் வேலைத்திட்டங்களிலும் இஸ்ரேல் அரசு தோல்வியடைந்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். ஜெருசலேமிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு அருகில் எதிர்ப்பு பேரணி இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டதுடன், எதிர்ப்பு ஸ்லோகங்களையும் ஏந்தியிருந்ததாக தெரியவந்துள்ளது. சிறிய ஆர்ப்பாட்டமாக ஆரம்பமான எதிர்ப்பு நடவடிக்கை தற்போது இஸ்ரேல் முழுவதும் வியாபித்துள்ளது. சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். எனினும் எதிர்வரும் நாட்களில் குறித்த எண்ணிக்கை 25 ஆயிரமாக அதிகரிக்குமென ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்துள்ளனர்.