பஸ் முன்னுரிமை மருங்கு சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நாளை முதல் பஸ் முன்னுரிமை மருங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதே இதன் நோக்கமாகும்.
இதேவேளை மேல்மாகாணத்தில் பல்வேறு கட்டங்களாக பஸ் முன்னுரிமை மருங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.