20வது அரசியல் யாப்பு திருத்தத்தை ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கிய வகையில் 9 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. அமைச்சர், பேராசிரியர், ஜி.எல்.பீரிஸ் குழுவின் தலைவராக செயற்படவுள்ளார். அமைச்சரவை அமைச்சர்களான உதய கம்மன்பில, அலி சப்ரி, நிமல் சிறிபால டி சில்வா, விமல் வீரவங்ச ஆகியோரும் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
இதற்கு மேலதிகமாக இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த், எஸ்.வியாழேந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, பிரேமநாத் சி தொலவத்த ஆகியோரும் அரசியல் யாப்பு திருத்த ஆய்வு குழுவில் அங்கம் வகிக்கின்றனர். நாளை மறுதினம் குறித்த குழுவின் அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.