அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை இலக்காக வைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் நாடுகளைச் சேர்ந்த இணைய ஊடுறுவிகள் சைபர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். எனினும் அவர்களது தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இணைய ஊடுறுவிகள் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகியோரின் பிரச்சாரப் பணிகளை இலக்குவைத்தே சைபர் தாக்குதலை நடத்த முற்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு இணைய ஊடுறுவிகள், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்துள்ளமை, தெளிவான விடயமென மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப், தனது வெற்றிக்காக ரஷ்ய இணைய ஊடுறுவிகளின் ஒத்துழைப்பை பெற்றிருந்தார் என குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன.
இவ்வாறான நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து இணைய ஊடுறுவிகள் தமது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளனர்.