திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவரான தெமட்டகொட சமிந்த என்பவருடன் நெருங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கிரிபத்கொட பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட மொஹமட் பாருக் மொஹமட் ரிஸ்வான் என்பவர் புதுக்கடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். இவரிடம் 5 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது. ஆமிசம்பத் என்பவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் மொஹமட் ரிஸ்வான் என்பவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
50 கிராம் ஹெரோயினுடன் குற்றப்புலனாய்வு பிரிவு இதற்கு முன்னரும் ரிஸ்வான் என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.