தீப்பற்றிக்கொண்ட நிவ் டயமன்ட் கப்பலை இலங்கை கடற்பரப்பில் இருந்து உடனடியாக வெளியேற்றுமாறு இக்கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு இன்று அறிவிக்கவுள்ளதாக சமூத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்துள்ள இக்கப்பல் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கு இது குறித்து எழுத்து மூலம் அறிவிக்கப்படவுள்ளது. இக்கப்பலை இலங்கை கடல் எல்லலைக்கு அப்பால் கொண்டு செல்லுமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனிடையே இக்கப்பலுக்கருகில் பெற்றுக்கொள்ளப்பட்ட நீர் மாதிரி இன்றைய தினம் இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது. குறித்த நீர் மற்றும் கப்பலுக்கு அண்மையில் படர்ந்து காணப்படும் படலம் தொடர்பில் இறுதி அறிக்கை அடுத்த திங்கட் கிழமையாகும் போது வெளியிடப்படுமென சமூத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர். டேர்னி பிரதீப் குமார தெரிவித்தார். இதேவேளை கப்பலில் ஏற்பட்ட தீ தற்போது முற்றாக அணைக்கப்பட்டுள்ளது. கப்பல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேற்றைய தினம் இக்கப்பலுக்குள் சென்று கண்காணிப்பை மேற்கொண்டனர் கப்பலானது தற்போது மட்டக்களப்பில் இருந்து 50 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.