நாடு முழுவதிலும் ஐயாயிரம் குளங்களை துரிதமாக புனரமைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியுள்ளார்.
கிராமிய வயல்களை அண்டியதான குளங்கள் நீர்த்தேக்கங்கள், நீர்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சூகூட்டத்தில் இதுபற்றி தெரிவிக்கப்பட்டது. குள புனரமைப்புக்கு இணைவாக ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் தூர்ந்து போன வயல்களை அண்டியதாக தேசிய உணவு உற்பத்திக்கு பங்களிப்புச்; செய்யும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. குள புனரமைப்புக்கு சிவில் பாதுகாப்பு படையின் உதவியும் பெற்று கொள்ளப்படும். இதற்கு முன்னரும் குள புனரமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவை புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்ககளின் விமர்சனங்களுக்குட்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.