குறைந்த விலையில் கையடக்க தொலைபேசிகள் விற்பனை செய்யப்படுமென இணையத்தளத்தில் விளம்பரம் செய்து நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் பெண் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கையடக்க தொலைபேசிகளை வழங்குவதாக கூறி வங்கி கணக்கில் பணத்தை வைப்பிடுமாறு கூரி சந்தேக நபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இருவரையும் மாத்தறை பகுதியில் வைத்து கைதுசெய்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். அவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.